கோவை: கோவையில் பொங்கல் விழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த தனியார் இன்ஜினியர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பொங்கல் விழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த தனியார் இன்ஜினியர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி ராகவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவரது சொந்த ஊரான ஈரோட்டுக்கு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் சென்று தனது சொந்த ஊரில் கொண்டாட விக்னேஷ் விரும்பினார். இதையடுத்து, கடந்த 14ம் தேதி விக்னேஸ்வரன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நீங்கள் ஊருக்கு வந்து விட்டீர்களா என கேட்டுள்ளனர். இல்லை நான் எனது ஊரில் தான் இருக்கிறேன் என்ன விஷயம் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உங்கள் வீடு திறந்து கிடக்கிறது என தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் உடன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள அனைத்து துணிகளும் சிதறிக்கிடந்தது. இதனால் ஏதாவது நகை பணம் கொள்ளை போய் இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். அப்போது பீரோவில் 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிவித்தார். ஆனால் பீரோவில் நகை இல்லை. ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ந்து சரவணம்பட்டி பகுதிகளில் வீட்டை உடைத்து கைவரிசை காட்டும் கும்பல் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சரவணம்பட்டி ராகவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவரது சொந்த ஊரான ஈரோட்டுக்கு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் சென்று தனது சொந்த ஊரில் கொண்டாட விக்னேஷ் விரும்பினார். இதையடுத்து, கடந்த 14ம் தேதி விக்னேஸ்வரன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நீங்கள் ஊருக்கு வந்து விட்டீர்களா என கேட்டுள்ளனர். இல்லை நான் எனது ஊரில் தான் இருக்கிறேன் என்ன விஷயம் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உங்கள் வீடு திறந்து கிடக்கிறது என தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் உடன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள அனைத்து துணிகளும் சிதறிக்கிடந்தது. இதனால் ஏதாவது நகை பணம் கொள்ளை போய் இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். அப்போது பீரோவில் 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிவித்தார். ஆனால் பீரோவில் நகை இல்லை. ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ந்து சரவணம்பட்டி பகுதிகளில் வீட்டை உடைத்து கைவரிசை காட்டும் கும்பல் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.