கோவை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பாளையம் வையாபுரி நகரில் தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் 1,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பாளையம் வையாபுரி நகரில் தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் 1,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் எஸ்.எஸ்.குளம் கோவை மேற்கு மாவட்டம் ஒன்றியம் நகரம் சார்பில் கோவில்பாளையம் பேரூராட்சி வையாபுரி நகரில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
வையாபுரி நகர் ஆரோக்கியஜான் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் கலந்து கொண்டு 1,200 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மணி என்ற விஜயகுமார், சுப்பையன், பேரூர் செயலாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் ராசு என்ற பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய பேரூர் அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.