கோவை: வரும் தேர்தலில் தே.மு.தி.க. மாபெரும் வெற்றி அடையும் என்று கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கோவை: வரும் தேர்தலில் தே.மு.தி.க. மாபெரும் வெற்றி அடையும் என்று கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க.வினர் தமிழகம் முழுவதும் பொங்கல் விழா நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கோவை மாநகர மாவட்டப் பகுதிகளில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பொங்கல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முருகன், வனிதா துரை, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், பொன்ராஜ், சண்முகம், வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒன்றியத்துக்குட்பட்ட கோவில்பாளையம் பஸ் நிலையம் எதிரே கட்சிக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசும்போது, `இந்த 2021 ஆம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு சிறந்த ஆண்டாக விளங்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் முரசு சின்னம் மாபெரும் வெற்றி அடையும்' என்றார். முன்னதாக எஸ்.எஸ்.குளம் பகுதிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, நிர்வாகிகள் சிவ இளங்கோ, குணசேகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் ரங்கராஜ், பாபு, ராமலிங்கம், சிவலிங்கம், தீனதயாளன் ஒன்றிய நிர்வாகிகள் குழந்தைவேலு, மோகன்ராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.