திருப்பூர்: திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
திருப்பூர்: திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பாக திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் 24 ஆவது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். பெண்கள் கும்மியடித்து பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பாக திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் 24 ஆவது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். பெண்கள் கும்மியடித்து பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.