கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் குரங்கு அருவிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் குரங்கு அருவிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
பொள்ளாச்சி மட்டுமின்றி கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளின் ஒரு இடமாக ஆழியார் உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பொங்கல் தினமான இன்று, காலை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குரங்கு அருவிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

மேலும், அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில், வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி மட்டுமின்றி கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளின் ஒரு இடமாக ஆழியார் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பொங்கல் தினமான இன்று, காலை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குரங்கு அருவிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
மேலும், அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில், வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.