கோவை: வால்பாறையில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வளாகத்தில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை, வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு இணைந்து பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியாளர் ராசாமணி தலைமை தாங்கினார். விழாவில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் டி.அரவிந்த், வால்பாறை நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.
கோலப்போட்டி, பொங்கல் வைத்தல், லெமன் அண்ட் ஸ்பூன், உறியடித்தல், மியூசிக்கல் சேர், கபடி போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அனைவருக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள், சுழல் கோப்பை வழங்கப்பட்டது. அம்மா ஸ்கூட்டரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கோவை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் டி.அரவிந்த் குமார், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார் மற்றும் வால்பாறை சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.சுரேஷ் அலி மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன் மற்றும் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயன்பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கும், கோவை மாவட்ட சுற்றுலாத்துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வளாகத்தில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை, வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு இணைந்து பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியாளர் ராசாமணி தலைமை தாங்கினார். விழாவில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் டி.அரவிந்த், வால்பாறை நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.
கோலப்போட்டி, பொங்கல் வைத்தல், லெமன் அண்ட் ஸ்பூன், உறியடித்தல், மியூசிக்கல் சேர், கபடி போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அனைவருக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள், சுழல் கோப்பை வழங்கப்பட்டது. அம்மா ஸ்கூட்டரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கோவை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் டி.அரவிந்த் குமார், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார் மற்றும் வால்பாறை சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.சுரேஷ் அலி மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன் மற்றும் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயன்பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கும், கோவை மாவட்ட சுற்றுலாத்துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.