கோவை கிணத்துக்கடவு அருகே வீட்டின் மதில் சுவர் இடிந்து கூலித்தொழிலாளி பலி!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சுவர் இடிந்து கூலித்தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சுவர் இடிந்து கூலித்தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (41). இவர் நேற்று வடக்கிபாளையம் பகுதிக்கு வேலைக்குச் சென்றார். பின்னர் வேலைகளை முடித்து விட்டு மதிய உணவு உண்பதற்காக அங்கு உள்ள மதில் சுவர் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, மழையால் சேதமடைந்த இருந்த அந்த மதில் சுவர் திடீரென்று இடிந்து மணிகண்டன் மீது விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து மணிகண்டன் மீது விழுந்திருந்த இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அங்கு இருந்தவர்கள் வடக்கிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கோவை பெரியநாயக்கன் பாளையம், வெள்ளமடை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மகன் அஜய் (20), கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடையவில்லை என்பதால் மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில், விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...