பொள்ளாச்சியில் கமல்ஹாசன் பரப்புரை..! பாலியல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு உள்ளது என நிரூபணமாகியுள்ளது

பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் மற்றும் மகாலிங்கபுரம் கட்சி அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசுகையில், பொள்ளாச்சி பகுதிக்கு நல்ல திட்டங்கள் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்து விட்டன, வி.கே. பழனிச்சாமி முயற்சியால் கிடைத்த பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்திற்கு பிறகு, பெரிய அளவிலான எந்த திட்டமும் இங்கு செயல்படவில்லை. தனி மாவட்டம் ஆவதற்கு எல்லா தகுதியும் பொள்ளாச்சி பகுதிக்கு உள்ளது.



பொள்ளாச்சி பல்வேறு வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய பகுதி, பொள்ளாச்சி எனும் நகரம் பாலியல் குற்றங்களுக்கு புகழ் பெறக்கூடாது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு உள்ளது என ஊடகங்கள் மூலமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, இனியும் காத்திருக்காமல் நல்லவர்கள் ஆட்சிக்கு வர மக்கள் வழி செய்ய வேண்டும்.



நீர், நிலம் உள்ளிட்ட அனைத்து வகை வளங்களும் பெற்ற இந்த பகுதி, நல்வழியில் உபயோகமாக இருக்க வேண்டுமே தவிர, கொள்ளையர்கள் கொள்ளையடிக்க ஒரு கொலைக் களமாக மாறிவிடக்கூடாது என்று, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...