பொள்ளாச்சியில் கமல்ஹாசன் பரப்புரை..! பாலியல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு உள்ளது என நிரூபணமாகியுள்ளது

பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் மற்றும் மகாலிங்கபுரம் கட்சி அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசுகையில், பொள்ளாச்சி பகுதிக்கு நல்ல திட்டங்கள் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்து விட்டன, வி.கே. பழனிச்சாமி முயற்சியால் கிடைத்த பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்திற்கு பிறகு, பெரிய அளவிலான எந்த திட்டமும் இங்கு செயல்படவில்லை. தனி மாவட்டம் ஆவதற்கு எல்லா தகுதியும் பொள்ளாச்சி பகுதிக்கு உள்ளது.



பொள்ளாச்சி பல்வேறு வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய பகுதி, பொள்ளாச்சி எனும் நகரம் பாலியல் குற்றங்களுக்கு புகழ் பெறக்கூடாது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு உள்ளது என ஊடகங்கள் மூலமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, இனியும் காத்திருக்காமல் நல்லவர்கள் ஆட்சிக்கு வர மக்கள் வழி செய்ய வேண்டும்.



நீர், நிலம் உள்ளிட்ட அனைத்து வகை வளங்களும் பெற்ற இந்த பகுதி, நல்வழியில் உபயோகமாக இருக்க வேண்டுமே தவிர, கொள்ளையர்கள் கொள்ளையடிக்க ஒரு கொலைக் களமாக மாறிவிடக்கூடாது என்று, அவர் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....