போகி பண்டிகை: பெரியார் புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது!

கோவை: அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோவை: போகி பண்டிகையையொட்டி பெரியார் புத்தகங்களை எரிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் பிரசன்னா சாமி கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் இன்று காலை போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. பழையன கழிந்து புதியன நம் வாழ்வில் வரவேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடத்தில் வீடுகளில் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் கழிவுப்பொருட்களை இந்த நாளில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். இது தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு முந்தின நாளில் போகி பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல நம்முடைய மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டு மனதில் உற்சாகமும், புதிய எண்ணங்களும் உதயமாகும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.



இதையொட்டி இன்று பெரியாருடைய புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியின் பிரசன்னா சாமி கைது செய்யப்பட்டார். போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இப்பண்டிகையையொட்டி இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாகக்கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயன்றனர்.



கட்சியின் மாநில துணைத்தலைவர் பிரசன்ன சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் `பெரியாரின் கடவுள் மறுப்பு, பெண் ஏன் அடிமையானாள்' உள்ளிட்ட அவரது புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்துவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர். அப்போது போலீசார் இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் பிரசன்ன சாமியை கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அசோக் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...