திருப்பூர்: தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரவே அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், மக்களுக்கு ஒன்று என்றால் அதிமுக களத்தில் நிற்கும் என திருப்பூரில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரவே அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், மக்களுக்கு ஒன்று என்றால் அதிமுக களத்தில் நிற்கும் என திருப்பூரில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம் மற்றும் வாலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மத்திய அரசுடன் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்காகவே இணக்கமாக இருப்பதாகவும், ஆனால் கூட்டணி வைத்ததற்காக பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இதற்கு முன்னாள் திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தை சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு தீங்கு என்றால் மக்களோடு களத்தில் அதிமுக நிற்கும் எனவும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம் மற்றும் வாலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மத்திய அரசுடன் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்காகவே இணக்கமாக இருப்பதாகவும், ஆனால் கூட்டணி வைத்ததற்காக பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இதற்கு முன்னாள் திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தை சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு தீங்கு என்றால் மக்களோடு களத்தில் அதிமுக நிற்கும் எனவும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.