பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
நேற்று மற்றும்.இன்று, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அவர், நாளை காலை 11 மணிக்கு ஈரோட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்கிரார்.
பின், மாலை 6:15 மணிக்கு பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தேர் நிலை பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். பின்னர், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி தலைமை அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார், என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மற்றும்.இன்று, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அவர், நாளை காலை 11 மணிக்கு ஈரோட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்கிரார்.
பின், மாலை 6:15 மணிக்கு பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தேர் நிலை பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். பின்னர், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி தலைமை அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார், என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.