கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது, ஏழை மக்களின் அமைதியை வெகுவாக பாதிக்கிறது. பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகே இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது.
இந்த நிலையில், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர உள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த, ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது, ஏழை மக்களின் அமைதியை வெகுவாக பாதிக்கிறது. பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகே இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது.
இந்த நிலையில், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர உள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த, ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.