புதிதாக வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது, ஏழை மக்களின் அமைதியை வெகுவாக பாதிக்கிறது. பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகே இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது.

இந்த நிலையில், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர உள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த, ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...