திருப்பூர்: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், தமிழகத்தில் அதிக மக்கள்தொகை உள்ள முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கருணாஸ் கூறியுள்ளார்.
திருப்பூர்: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், தமிழகத்தில் அதிக மக்கள்தொகை உள்ள முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கருணாஸ் கூறியுள்ளார்.
திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்:
முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்புக்கும், ஜாதிக்கும் எதிரானது அல்ல. அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. எங்களைப் போன்ற சிறிய அமைப்புகள், கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும் எனவும் கடந்த முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்போம்.
மேலும் சசிகலா 27-ஆம் தேதி விடுதலையாக இருப்பதை எங்கள் சமூகம் மட்டுமல்லாமல் உண்மையான அ.தி.மு.க.வினர் வரவேற்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா? என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்:
முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்புக்கும், ஜாதிக்கும் எதிரானது அல்ல. அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. எங்களைப் போன்ற சிறிய அமைப்புகள், கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும் எனவும் கடந்த முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்போம்.
மேலும் சசிகலா 27-ஆம் தேதி விடுதலையாக இருப்பதை எங்கள் சமூகம் மட்டுமல்லாமல் உண்மையான அ.தி.மு.க.வினர் வரவேற்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா? என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.