பொள்ளாச்சி: கொரோனா நோய்க்கான தடுப்பூசி விரைவில் மத்திய அரசு சார்பில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்று அரசு அறிவித்திருந்தது.
பொள்ளாச்சி: கொரோனா நோய்க்கான தடுப்பூசி விரைவில் மத்திய அரசு சார்பில்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்று அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் முதல் முன் கொரோனா கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், முதற் கட்டமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி - சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்ட 5 மையங்களில் சிறப்பு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி -சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 முன் களபணியாளர்களைக் கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த ஒத்திகை மற்றும் செயல் முறை விளக்க முகாமை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி போடும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் முதல் முன் கொரோனா கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், முதற் கட்டமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி - சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்ட 5 மையங்களில் சிறப்பு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி -சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 முன் களபணியாளர்களைக் கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த ஒத்திகை மற்றும் செயல் முறை விளக்க முகாமை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி போடும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அறிவுரைகளை வழங்கினார்.