கோவை: மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சூலூர் பெரிய வதம்சேரி, நல்லி கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி, நெசவுத் தொழிலாளி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). இவர் சின்ன வதம்பச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று தனது வீட்டில் உள்ள தோட்டங்களுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் கை-கால்களை கழுவுவதற்காக வீட்டிலிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்தார். அப்போது தொட்டியின் அருகே இருந்த மோட்டாரைத் தொட்டார். மின்கசிவு ஏற்பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஒரே மகன் இறந்ததால் துளசிராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் பெரிய வதம்சேரி, நல்லி கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி, நெசவுத் தொழிலாளி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). இவர் சின்ன வதம்பச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று தனது வீட்டில் உள்ள தோட்டங்களுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் கை-கால்களை கழுவுவதற்காக வீட்டிலிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்தார். அப்போது தொட்டியின் அருகே இருந்த மோட்டாரைத் தொட்டார். மின்கசிவு ஏற்பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஒரே மகன் இறந்ததால் துளசிராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.