கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கோவை முத்தண்ணன் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது.
இங்கு குடியிருந்த மக்களுக்கு கீரணத்தம், வெள்ளலூர், உக்கடம், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 2,500 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, அடுக்குமாடி வீடுகளுக்கு சென்றனர்.

அதன்பின் காலியாக இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இதனிடையே, முத்தண்ணன் குளக்கரையில் 384 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் காலி செய்யாமல் அப்பகுதியிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் இந்த வீடுகளின் மின் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். இதையடுத்து, அவர்கள் வீடுகளைக காலி செய்து விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

இதைத் தொடர்ந்து, அப்பகுதில் 207 வீடுகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர். மீதம் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை முத்தண்ணன் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது.
இங்கு குடியிருந்த மக்களுக்கு கீரணத்தம், வெள்ளலூர், உக்கடம், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 2,500 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, அடுக்குமாடி வீடுகளுக்கு சென்றனர்.
அதன்பின் காலியாக இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
இதனிடையே, முத்தண்ணன் குளக்கரையில் 384 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் காலி செய்யாமல் அப்பகுதியிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் இந்த வீடுகளின் மின் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். இதையடுத்து, அவர்கள் வீடுகளைக காலி செய்து விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதில் 207 வீடுகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர். மீதம் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.