திருவள்ளூரில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபரை தற்காப்புக்காக கொலை செய்த பெண் விடுதலை! மாவட்ட எஸ்.பிக்கு குவியும் பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞரை இளம்பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞரை இளம்பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் 23 வயது பெண் ஒருவர் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜித் குமார் (25), என்ற வாலிபர் கையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றார். மறைவான இடத்தில் வைத்து என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் அந்தப் பெண் அவரை தாக்கி, அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். அந்த பெண் மீது கொலை வழக்கு 302 பிரிவு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இளம்பெண் அளித்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து காவல் நிலையத்துக்கு நேரில் வந்த ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தன், இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் பதிவு செய்த கொலை வழக்கை, ஐ.பி.சி பிரிவு 100 தற்காப்புக்காக செய்த கொலை என மாற்றி அந்த பெண்ணை விடுவித்தார். மேலும், எஸ் பி அரவிந்தன் அந்த பெண்ணை பாராட்டி அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து, எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ் அவர்களுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...