இந்தியாவில், புத்தாண்டு தினத்தில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்ததாக யுனிசெப் அறிவிப்பு!

கோவை: இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.


கோவை: இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும் அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.

புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளன. இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து சீனாவில் 35 ஆயிரத்து 615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10 ஆயிரத்து 312, எகிப்தில் 9 ஆயிரத்து 455, வங்காளதேசத்தில் 9 ஆயிரத்து 236, காங்கோவில் 8,640, குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்திற்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்துள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றி ட்டா போர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...