கோவை: இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கோவை: இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும் அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.
புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளன. இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து சீனாவில் 35 ஆயிரத்து 615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10 ஆயிரத்து 312, எகிப்தில் 9 ஆயிரத்து 455, வங்காளதேசத்தில் 9 ஆயிரத்து 236, காங்கோவில் 8,640, குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்திற்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்துள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றி ட்டா போர் தெரிவித்துள்ளார்.
2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும் அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.
புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளன. இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து சீனாவில் 35 ஆயிரத்து 615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10 ஆயிரத்து 312, எகிப்தில் 9 ஆயிரத்து 455, வங்காளதேசத்தில் 9 ஆயிரத்து 236, காங்கோவில் 8,640, குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்திற்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்துள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றி ட்டா போர் தெரிவித்துள்ளார்.