கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு அதரவு தெரிவிக்கும் விதமாக, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் விரைவில் மிகத்தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை காத்திருப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல்வேறு வடிவில் போராட்டங்கள் நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் விரைவில் மிகத்தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை காத்திருப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல்வேறு வடிவில் போராட்டங்கள் நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.