தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மக்கள் அவதி!

கோவை: தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மழைக்காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கோவை: தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மழைக்காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில்தென்மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் கடந்த ஒரு வாரமாகபனிப்பொழிவும் கடுமையான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில்வாகனத்தில் செல்பவர்கள், மாணவ - மாணவிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மழையில் நனைந்தபடியே செல்கின்றனர்.

கோவை தெலுங்குபாளையம், ராஜீவ்காந்தி நகர் பகுதியில்தார்ச்சாலை இல்லாத நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் மண் மற்றும் குழி தோண்டப்பட்ட காரணத்தால் சேறும் சகதியுமாககிடைக்கிறது. ஆகவே, அப்பகுதி மக்கள் இங்குள்ள சாலையைக் கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். கணுக்கால் அளவுக்குமண் பதிகிறது. ஆதலால்இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை அழைத்தால் அந்தப் பகுதிக்கு வர மறுக்கின்றனர்.மேலும் அப்பகுதி மக்கள் மருத்துவமனை மற்றும் கடைத் தெருவுக்குச் செல்ல மிகுந்த சிரமப்படுவதாக தெரிவித்தனர். மேலும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வரவும் முடியவில்லை. அதனால் பொதுமக்களின் நிலைமையைகருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...