கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் காவலருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் காவலருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கோவை மாவட்டம், ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்துப்பணியில் இருந்த தலைமைக்காவலர் பிரபு உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு விசாரணை செய்தார். விசாரணையில் அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் மனவிரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை வரவழைத்து அறிவுரை வழங்கி அவரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பத்திரமாக மீட்டுக் கொடுத்த தலைமைக்காவலருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கோவை மாவட்டம், ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்துப்பணியில் இருந்த தலைமைக்காவலர் பிரபு உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு விசாரணை செய்தார். விசாரணையில் அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் மனவிரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை வரவழைத்து அறிவுரை வழங்கி அவரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பத்திரமாக மீட்டுக் கொடுத்த தலைமைக்காவலருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.