தென்னை மட்டை விழுந்து மின்சாரம் தாக்கி பால் வியாபாரி சாவு!

கோவை: தென்னை மட்டை விழுந்து மின்சாரம் தாக்கியதில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: தென்னை மட்டை விழுந்து மின்சாரம் தாக்கியதில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெள்ளாளபாளையம், புளியமரத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 45). விவசாயியான இவரது மனைவி கலைமணி. பிரகாஷ் விவசாயத்துடன் பால் வியாபாரமும் செய்து வந்தார்.

வழக்கம்போல நேற்று அதிகாலை தோட்டத்தில் இருந்த பசுமாட்டில் பால் கறந்துவிட்டு பாலை கேனில் நிறைத்துவிடு வியாபாரத்திற்கு புறப்பட்டார். அங்குள்ள சாலையில் சென்றபோது ஒரு மின் கம்பம்அருகே தென்னை மரம் உயரமாக வளர்ந்து இருந்தது. அப்போது தென்னை மரத்திலிருந்து ஒரு பழுத்த மட்டை பெயர்ந்து அங்கு சென்ற மின் கம்பியின்மீது விழுந்தது.

தென்னை மட்டை விழுந்த வேகத்தில் மின்கம்பி அறுந்து மொபட்டில் சென்ற பிரகாஷின் கால் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...