காரமடையில், நகைக்கடை உரிமையாளரை தாக்கி 6 சவரன் தங்க நாணயம் கொள்ளை!

கோவை: காரமடையில், நகைக்கடை உரிமையாளரை தாக்கிவிட்டு 6 சவரன் தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.



கோவை: காரமடையில், நகைக்கடை உரிமையாளரை தாக்கிவிட்டு 6 சவரன் தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மேற்கு ரத வீதியில் உள்ள சோலையன் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கடையில் உள்ள தங்க ஆபரணங்களை கடையின் உரிமையாளர் சாந்தாமணியிடம் கேட்டு வாங்கி பார்த்துகொண்டிருந்தாராம். அப்போது உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு அங்கிருந்த நகைகளை திருடியிருக்கிறார். அவற்றை தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்ததை கடை உரிமையாளர் சாந்தாமணி கவனித்துவிட்டார்.



சுதாரித்துக்கொண்ட சாந்தாமணி கடைக்கு வெளியே வந்து உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைக்க முற்பட்டார். ஆனால் அந்த மர்ம நபர் சாந்தாமணியை கீழே தள்ளி தாக்கிவிட்டு 6 சவரன் தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதையடுத்து சாந்தாமணி காரமடை போலீசில் புகார் செய்தார். கடையில் இருந்த சி.சி.டிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...