கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் உரிய மரியாதை அளித்து, சீட் வழங்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவையில் நடைபெற்ற “தமிழக நாயுடு பேரவை” ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு அறிவித்துள்ளார்.
கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் உரிய மரியாதை அளித்து, சீட் வழங்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவையில் நடைபெற்ற “தமிழக நாயுடு பேரவை” ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு அறிவித்துள்ளார்.
கோவையில் நாயுடு பேரவையின் சார்பில் நாயுடு மற்றும் நாயக்கர் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவினரின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி மாதம் 3 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
"தமிழக நாயுடு பேரவையானது கடந்த 2001 - ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது, தமிழகம் முழுவதும் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். கோவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பேரவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்", என கோவை மாவட்ட தலைவர் V. ஜெய்சங்கர் நாயுடு தெரிவித்தார்.
மேலும், தெரிவிக்கையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது, அந்தந்த மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பு அமைந்து நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது, எனவும் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும் பேரவையின் அரசியலமைப்பு ஆரம்பிப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், என கூறினார்.
"வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்குவோம். நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய அமைப்பாக உள்ளனர். தற்போது, தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளனர், ஜாதி வாரியாக செய்யும் ஒதுக்கீடை நிறுத்தி தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்"என மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு தெரிவித்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளோம், என்றார்.
தமிழக நாயுடு பேரவையின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநில செயலாளர், ஊன்றுக்கோல் J. கருணாகரன் நாயுடு, மாநில ஒருங்கிணைப்பாளர் S. நவநீதகிருஷ்ணன் நாயுடு, மாநில பொதுச் செயலாளர். S. பாலாஜி நாயுடு, மாநில பொருளாளர். T. சுரேஷ் நாயுடு மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் J. அரவிந்தபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவையில் நாயுடு பேரவையின் சார்பில் நாயுடு மற்றும் நாயக்கர் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவினரின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி மாதம் 3 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
"தமிழக நாயுடு பேரவையானது கடந்த 2001 - ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது, தமிழகம் முழுவதும் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். கோவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பேரவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்", என கோவை மாவட்ட தலைவர் V. ஜெய்சங்கர் நாயுடு தெரிவித்தார்.
மேலும், தெரிவிக்கையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது, அந்தந்த மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பு அமைந்து நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது, எனவும் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும் பேரவையின் அரசியலமைப்பு ஆரம்பிப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், என கூறினார்.
"வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்குவோம். நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய அமைப்பாக உள்ளனர். தற்போது, தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளனர், ஜாதி வாரியாக செய்யும் ஒதுக்கீடை நிறுத்தி தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்"என மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு தெரிவித்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளோம், என்றார்.
தமிழக நாயுடு பேரவையின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநில செயலாளர், ஊன்றுக்கோல் J. கருணாகரன் நாயுடு, மாநில ஒருங்கிணைப்பாளர் S. நவநீதகிருஷ்ணன் நாயுடு, மாநில பொதுச் செயலாளர். S. பாலாஜி நாயுடு, மாநில பொருளாளர். T. சுரேஷ் நாயுடு மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் J. அரவிந்தபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.