கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 மணி நேரத்தில் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், ஈஸ்வரன் தலைமையில் இன்று காலை, காந்திசிலை, அண்ணா சிலை மற்றும் ஸ்டாண் மோர் சந்திப்பு பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடியை மாவட்ட செயலாளர் நித்யானந்தம் ஏற்றிவைத்தார்.

அதன், பின்னர் தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், கடந்த 10 ஆண்டுகளாக, வால்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிலுவையில் உள்ளன என்று ஆலோசிக்கப்பட்டது.
இதனால், இங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வாழ வேண்டியுள்ளதால், அவர்கள் கீழ்ப் பகுதிக்கு இடம்பெய்கின்றனர். இதனையெல்லாம், எங்களுடைய கூட்டணி ஆட்சியில் களை எடுப்போம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வால்பாறை மதிமுக நகர செயலாளர் கல்யாணி, காங்கிரஸ் கட்சி குசேலன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சபீர் மற்றும் அலி வால்பாறையில் உள்ள கழகத் தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதன், பின்னர் தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், கடந்த 10 ஆண்டுகளாக, வால்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிலுவையில் உள்ளன என்று ஆலோசிக்கப்பட்டது.
இதனால், இங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வாழ வேண்டியுள்ளதால், அவர்கள் கீழ்ப் பகுதிக்கு இடம்பெய்கின்றனர். இதனையெல்லாம், எங்களுடைய கூட்டணி ஆட்சியில் களை எடுப்போம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வால்பாறை மதிமுக நகர செயலாளர் கல்யாணி, காங்கிரஸ் கட்சி குசேலன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சபீர் மற்றும் அலி வால்பாறையில் உள்ள கழகத் தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.