பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள டி.கே.புதூரை சேர்ந்தவர் அகத்துசாமி (45). இவரது சகோதரன் அகத்தீஸ்வரன்(45). இருவரும் நேற்று மாலை பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அகத்தீஸ்வரன் வாகனத்தை இயக்கி வந்தார்.

அப்போது, ஐய்யம்பாளையம் அருகே அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்ததிம்மங்குத்து பகுதியைச் சேர்ந்த ராஜன் (62) என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால்,ன்மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், காயமடைந்த சகோதரர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, உயிரிழந்த ராஜனின் மகன் கார்த்திக் (35), கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி தாலுகா போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...