கோவை: தி.மு.க. நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் புகுந்த பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கோவை: தி.மு.க. நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் புகுந்த பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் தி.மு.க. சார்பில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட பெண் ஒருவர் கிராம சபை என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து `நீ எந்த ஊரும்மா?' என ஸ்டாலின் கேள்வி கேட்டார். அப்போது அந்தப்பெண் மைல்கல் பகுதியிலிருந்து வருவதாக தெரிவித்தார். மேலும் அந்தப்பெண், `தான் ஒரு இந்திய பிரஜை எனக்கு கேள்வி கேட்க உரிமையுள்ளது' என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின் அப்பெண் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொல்லி வந்திருக்கிறார் என்று கூறினார் உடனடியாக தி.மு.க.வினர் கூச்சலிட்டனர்.
இதையடுத்து அந்தப்பெண் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.