கோவை: இந்து ஆலயங்களில் சிறப்பு கட்டண வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யாவிட்டால் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: இந்து ஆலயங்களில் சிறப்பு கட்டண வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யாவிட்டால் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் புரட்சி படை இயக்கத்தின் கொடி அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பீமான் பாண்டி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படும். இந்துக் கோவில்களின் முன்பு பெரியார் சிலை அமைப்பது, பெரியார் சிலையில் வாசகங்கள் வைப்பது போன்ற செயல்களை உடனடியாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் கிறிஸ்தவ ஆலயங்கள், இஸ்லாமியர் பள்ளிவாசல்கள் முன்பும் இதேபோன்று சிலைகளில் வாசகங்கள் அமைப்போம். இந்து ஆலயங்களில் சிறப்புக் கட்டண வழிபாட்டுக்கு கட்டணங்கள் வசூலிப்பதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அனைத்துக் கோயில்களிலும் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு தலைவர் எம்.எஸ்.கே.செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம் ராகுல்,கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன்,கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினர்களான ராஷ்ட்ரிய ஜனதா சங்க மாநிலத் தலைவர் ராமநாதன், சிவசேனா காவி புலிப்படை நிறுவன மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ், ஹிந்து தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் புரட்சி படை இயக்கத்தின் கொடி அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பீமான் பாண்டி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படும். இந்துக் கோவில்களின் முன்பு பெரியார் சிலை அமைப்பது, பெரியார் சிலையில் வாசகங்கள் வைப்பது போன்ற செயல்களை உடனடியாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் கிறிஸ்தவ ஆலயங்கள், இஸ்லாமியர் பள்ளிவாசல்கள் முன்பும் இதேபோன்று சிலைகளில் வாசகங்கள் அமைப்போம். இந்து ஆலயங்களில் சிறப்புக் கட்டண வழிபாட்டுக்கு கட்டணங்கள் வசூலிப்பதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அனைத்துக் கோயில்களிலும் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு தலைவர் எம்.எஸ்.கே.செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம் ராகுல்,கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன்,கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினர்களான ராஷ்ட்ரிய ஜனதா சங்க மாநிலத் தலைவர் ராமநாதன், சிவசேனா காவி புலிப்படை நிறுவன மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ், ஹிந்து தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.