கோவை: கோவை பொள்ளாச்சி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு, கேரள சமாஜம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்கர் (17), ரோஹித் (17), கோட்டம் பட்டியைச் சேர்ந்தவர் கவின்குமார் (16). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் காருக்குள் இருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே கணேஷ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ரோஹித், கவின்குமார் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, பெரியநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருடைய மனைவி ஜெயராணி (46), ஓட்டல் உரிமையாளர்.
இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடித்து ஜெயராணி ஓட்டலை மூடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் சாப்பாடு கேட்டனர். அவர் சாப்பாடு இன்று இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் உருட்டுக்கட்டையால் ஜெயராணி தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராணியை தாக்கிய எல்.ஐ.சி காலனியை சேர்ந்த கார்த்திக் (20) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரது நண்பர் அஜித் (20), என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு, கேரள சமாஜம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்கர் (17), ரோஹித் (17), கோட்டம் பட்டியைச் சேர்ந்தவர் கவின்குமார் (16). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் காருக்குள் இருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே கணேஷ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ரோஹித், கவின்குமார் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, பெரியநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருடைய மனைவி ஜெயராணி (46), ஓட்டல் உரிமையாளர்.
இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடித்து ஜெயராணி ஓட்டலை மூடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் சாப்பாடு கேட்டனர். அவர் சாப்பாடு இன்று இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் உருட்டுக்கட்டையால் ஜெயராணி தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராணியை தாக்கிய எல்.ஐ.சி காலனியை சேர்ந்த கார்த்திக் (20) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரது நண்பர் அஜித் (20), என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.