திருந்தி வாழ்ந்த கஞ்சா வியாபாரியை மிரட்டி ரூ. 1 லட்சம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!

கோவை: ஒரு காலத்தில் கஞ்சா வியாபாரியாக இருந்தவர் திருந்தி வாழ்ந்த நிலையில் அவர்மீது வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூபாய் 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: ஒரு காலத்தில் கஞ்சா வியாபாரியாக இருந்தவர் திருந்தி வாழ்ந்த நிலையில் அவர்மீது வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூபாய் 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி மகேஸ்வரி. விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா விற்றுவந்ததாக தெரிகிறது. அதன் பிறகு அவர் திருந்தி கட்டட மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விஜயகுமாரிடம், `உன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யாமல் இருக்க எங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சமாக தர வேண்டும்' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தான் கஞ்சா விற்பனை செய்வதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

போலீசாரின் தொடர் மிரட்டலால் பயந்துபோன விஜயகுமார் நேற்று முன்தினம் கோவை கணபதியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் ஏட்டு ஆகியோரிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதி 70 ஆயிரம் ரூபாய் இல்லாததால் அவர் தனது மனைவி மகேஸ்வரியின் நகையை அடகு வைக்கத் தருமாறு கேட்டுள்ளார். அவர் நகை தர மறுத்த நிலையில் இந்த விவகாரம் அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்களது அறிவுறுத்தலின்பேரில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 70 ஆயிரம் ரூபாயை விஜயகுமாரிடம் கொடுக்க, அதை அவர் இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் ஏட்டு ராமசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன்பிறகு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியபோது கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரத்து 100 சிக்கியது. அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான 2 பேரும் விஜயகுமாரை ஏற்கனவே மூன்று முறை மிரட்டி பணம் வாங்கியது தெரியவந்தது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...