திருப்பூரில் அரசு மதுபான கடைக்கு எதிராக பொதுமக்கள் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் அரசு மதுபானக்கடைக்கு எதிராக பொதுமக்கள் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் அரசு மதுபானக்கடைக்கு எதிராக பொதுமக்கள் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் 1965 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அப்பகுதி வழியே பள்ளிக்கூடங்கள் மற்றும் கோவிலுக்கு சென்று வரும்போது மதுபிரியர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாக கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், காலை முதல் மழை பெய்து வந்த நிலையிலும் பொதுமக்கள் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாத நிலையில், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், டாஸ்மாக் நிர்வாகம் கடையை அப்புறப்படுத்த எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...