கோவை: கோவையில் பனிப்பொழிவுக்கு மத்தியில் இன்று காலை திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.
கோவை: கோவையில் பனிப்பொழிவுக்கு மத்தியில் இன்று காலை திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.
தமிழகத்தில் பல்வேறுவிதமான புயல் சின்னங்கள் உருவாகியநிலையில் கோவையில் பலத்த மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பருவமழையும் பெய்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருக்கிறது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மொத்தத்தில் கோவை மக்கள் மழையைக் கடந்து பனிப்பொழிவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை கடுமையான பனிப்பொழிவு இருந்தது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் காலையில் நடைபயிற்சி செல்லக்கூடியவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் என அனைவரும் ஸ்வெட்டர் அணிந்து சென்றனர்.
இதற்கிடையே இன்று அதிகாலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. மக்கள் அனைவரும் இது பனிப்பொழிவின் தாக்கமென்று நினைத்தார்கள். ஆனால், திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்தது.
நேரம் செல்லச் செல்ல அது கன மழையாக மாறியது. இதனால் வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். குறிப்பாக கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு, நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. திடீர் கனமழையால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தமிழகத்தில் பல்வேறுவிதமான புயல் சின்னங்கள் உருவாகியநிலையில் கோவையில் பலத்த மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பருவமழையும் பெய்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருக்கிறது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மொத்தத்தில் கோவை மக்கள் மழையைக் கடந்து பனிப்பொழிவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை கடுமையான பனிப்பொழிவு இருந்தது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் காலையில் நடைபயிற்சி செல்லக்கூடியவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் என அனைவரும் ஸ்வெட்டர் அணிந்து சென்றனர்.
இதற்கிடையே இன்று அதிகாலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. மக்கள் அனைவரும் இது பனிப்பொழிவின் தாக்கமென்று நினைத்தார்கள். ஆனால், திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்தது.
நேரம் செல்லச் செல்ல அது கன மழையாக மாறியது. இதனால் வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். குறிப்பாக கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு, நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. திடீர் கனமழையால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.