கோவை மாவட்டத்தில் 270 கோடியில் பொங்கல் பரிசு: அமைச்சர் எஸ். பி வேலுமணி தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் 270 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அமைச்சர் எஸ். பி வேலுமணி கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 270 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அமைச்சர் எஸ். பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை கண்ணப்பன் நகர் ரத்தினபுரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறையின் கீழ் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் எஸ். பி வேலுமணி நேற்று திறந்து வைத்தார். அப்போது ரூபாய் 2,000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார் .

இதையடுத்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், `பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 865 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை ,ஏலக்காய் மற்றும் முழுநீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 2,500 ரொக்கம் ஆகியவை வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் ரூபாய் 16. 87 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு தலா ரூபாய் 2,500 வீதம் ரொக்கமாக ரூபாய் 252.96 கோடியும் என மொத்தம் ரூபாய் 269. 83 கோடி மதிப்பில் வழங்கப்பட உள்ளது' என்றார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே அர்ஜுனன், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...