கோவை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை. டிசம்பர். 31- கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1 லட்சம்ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பள்ளிகளின் உரிமத்தைப் புதுப்பிக்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோவை ரேஸ் கோர்சில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் புத்தாண்டுப் பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...