கோவை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை. டிசம்பர். 31- கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1 லட்சம்ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பள்ளிகளின் உரிமத்தைப் புதுப்பிக்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோவை ரேஸ் கோர்சில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் புத்தாண்டுப் பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...