கோவை: கோவை காரமடை குட்டை ஊரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் விஜய பிரஷத்தா.
கோவை: கோவை காரமடை குட்டை ஊரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் விஜய பிரஷத்தா.
ஐ.டி ஊழியரான இவரது மொபட் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. அதை அவர் பல இடங்களில் தேடி வந்தார். நேற்று முன்தினம் விஜய் பிரஷத்தா தனது தந்தையுடன் குட்டையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருட்டுபோன அவரது மொபட்டை வாலிபர் ஒருவர் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் தனது தந்தையின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அந்த வாலிபர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பதும், அவர் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐ.டி ஊழியரான இவரது மொபட் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. அதை அவர் பல இடங்களில் தேடி வந்தார். நேற்று முன்தினம் விஜய் பிரஷத்தா தனது தந்தையுடன் குட்டையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருட்டுபோன அவரது மொபட்டை வாலிபர் ஒருவர் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் தனது தந்தையின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அந்த வாலிபர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பதும், அவர் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.