தேர்தல் வருவதற்குள் அடையாள அட்டைகளை புதுபித்து தர கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை..!

கோவை: தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை புதுபித்து தர வேண்டும், என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை புதுபித்து தர வேண்டும், என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல், சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டன. இதனால், வங்கி கடன் கூட பெற முடியாத சூழ்நிலையில் உள்ளதாக சாலையோர வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறியதாவது:

கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும், என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பாக சிறப்பு வழிகாட்டுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆவணங்கள் பெறப்பட்டு, அதனை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வங்கி கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட அடையாள அட்டை இன்னமும் புதுபிக்கப்படவில்லை. இதனால், வங்கிகளில் சில வியாபாரிகளுக்கு கடன் தர மறுக்கப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் போது சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அடையாள அட்டைகள் தேவைப்படுகிறது. தேர்தல் வருவதற்குள் அடையாள அட்டைகளை மாநகராட்சி நிர்வாகம் புதுபித்து தரவேண்டும், என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...