வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் தேயிலை தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணியின்போது பெண் தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணியின்போது பெண் தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டி உள்ளது நல்ல காத்து எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஜெயமணி (54). இவர் இன்று காலை தேயிலை காடு எண் 44ல் சக தொழிலாளர்களுடன், தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.



அப்போது, அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு காட்டு யானை வெளியே வந்து ஜெய மணியின் பின்புறம் தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே, கீழே விழுந்த ஜெயமணியை அந்த காட்டு யானை மிதித்துக் கொன்றது. 

இதை நேரில் பார்த்த அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் சத்தம் போட்டபடி அங்கிருந்து ஓடி உயிர் பிழைத்தனர். பின்னர், எஸ்டேட் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகளை விரட்டி விட்டு, ஜெயமணியின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பகல் நேரத்தில், கொழுந்து பறிக்கும் பணியின்போது, காட்டு யானை ஒரு பெண் தொழிலாளியை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பட்டப் பகலில், யானை மிதித்து, பெண் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...