நீலகிரி: உதகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் நாளை (31.12.2020) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி: உதகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் நாளை (31.12.2020) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலைரயிலில் பயணிப்பதை தங்களின் சுற்றுலா திட்டங்களில் ஒரு அம்சமாக வைப்பது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மலை ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
குறிப்பாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் மற்றும் உதகை - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இம்மாதம் 7ம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மலைரயில் பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனை ஓட்டப் பணிகளை பணிமனை ஊழியர்கள் (work shop) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.