தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோவை: தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் விரைவில் விற்பனையாகக்கூடிய நுகர்பொருள் நிறுவனங்களைக் கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை விலைக் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யும் சில்லரை வணிகத்துக்கு அதிக விலையும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த விலையும் அளிப்பதாக குற்றம் சாட்டினர்.



இந்திய அளவில் விரைவாக விற்பனையாகக்கூடிய நுகர்பொருள்கள் 90 சதவீதம் சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமே நடைபெறுவதாகத் தெரிவித்த அவர்கள் 10 சதவீதம் மட்டுமே ஆன்லைன், ரிலையன்ஸ், ஜியோமார்ட், பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களில் நடைபெறுவதாகதெரிவித்தனர். 10 சதவீதம் மட்டுமே விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து 90 சதவீதம் விற்பனை செய்யும் சில்லரை வணிகத்தை அளிக்கும் நோக்குடன் இந்த செயல்பாடு அமைந்திருப்பதாகவும் கூறினர்.

இத்தகைய சூழலில் இரட்டை விலைக் கொள்கையை எஃப்.எம்.சி.ஜி (FMCG) தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளத் தவறினால் தமிழ்நாடு நுகர்வோர் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களோடு இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவையைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...