கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி குப்பேபாளையத்தில் காட்டு யானைகள் அச்சுறுத்தி வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி குப்பேபாளையத்தில் காட்டு யானைகள் அச்சுறுத்தி வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் யானைகளை அப்பகுதியிலிருந்து அகற்றி காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி வனத்துறையினரை கேட்டுக்கொண்டார். அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் காட்டு யானைகள் வேறு இடத்துக்கு அகற்றப்பட்டது.

காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் பணிகளை சிறப்பாக செய்து முடித்த வனத்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்க முடிவு செய்தனர். அமைச்சர் வேலுமணி வனத்துறை அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி அவர்களை பாராட்டி கௌரவித்தார்.
இந்நிலையில் இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் யானைகளை அப்பகுதியிலிருந்து அகற்றி காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி வனத்துறையினரை கேட்டுக்கொண்டார். அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் காட்டு யானைகள் வேறு இடத்துக்கு அகற்றப்பட்டது.
காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் பணிகளை சிறப்பாக செய்து முடித்த வனத்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்க முடிவு செய்தனர். அமைச்சர் வேலுமணி வனத்துறை அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி அவர்களை பாராட்டி கௌரவித்தார்.