10 பவுன் நகையை நூதனமான அபகரித்த உறவுப்பெண்: மீட்டுத்தர கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மனு!

கோவை: 10 பவுன் நகையை நூதனமுறையில் அபகரித்த உறவுப்பெண்ணிடமிருந்து நகையை மீட்டுத்தருமாறு கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மனு கொடுத்தனர்.


கோவை: 10 பவுன் நகையை நூதனமுறையில் அபகரித்த உறவுப்பெண்ணிடமிருந்து நகையை மீட்டுத்தருமாறு கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மனு கொடுத்தனர்.

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியை இன்று மதியம் கணவன், மனைவி இருவர் வந்து சந்தித்தனர். அப்போது அவர்கள் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய பெயர் சாந்தகுமார், என் மனைவி பெயர் முருகேஸ்வரி. நாங்கள் கோவை பீளமேடு, காந்திமா நகர் பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எங்கள் வீட்டின் அருகே வசிக்கும் உறவுக்காரப்பெண் என் மனைவி முருகேஸ்வரியிடம் வந்து நீங்கள் அணிந்திருக்கும் 11 பவுன் செயின் போலவே எனக்கும் செய்ய வேண்டும், கொடுங்கள் என வாங்கிச் சென்றார். அதன்பிறகு கொடுத்து விட்டார். அதை என் மனைவி வீட்டின் பீரோவில் வைத்து விட்டார்.

இரண்டு நாள் கழித்து பார்க்கும்போது அந்த செயின் கருத்துப்போய் இருந்தது தெரிய வந்தது. உறவுக்காரப் பெண் 11 பவுன் நகையை நூதனமான முறையில் ஏமாற்றி கவரிங் நகையை மாற்றி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். உறவுக்கார பெண் அபிநயாவை அழைத்து விசாரித்தனர். அதற்கு அந்தப் பெண் நான் இவர்களிடம் நகையை வாங்கவில்லை எனக் கூறிவிட்டார். அன்றுமுதல் நாங்கள் மன உளைச்சலுடன் காணப்படுகிறோம். இதுகுறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக எங்களது பத்தே கால் பவுன் நகையை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ராஜாமணி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...