கோவை: வீட்டை அபகரித்து விட்டு மருமகள் மற்றும் பேரன் தன்னை கொடுமைப்படுத்துவதாக 85 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வீட்டை அபகரித்து விட்டு மருமகள் மற்றும் பேரன் தன்னை கொடுமைப்படுத்துவதாக 85 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மனைவி பெரியம்மாள்(85). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பேரன் மற்றும் மருமகள் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு மருத்துவ செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என கூறி மனு அளித்தார்.
பின்னர் மூதாட்டி பெரியம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு 5 செண்ட் இடத்துடன் கூடிய வீட்டை தனது பேரன் கோபாலகிருஷ்ணன் பெயரில் எழுதி வைத்ததாக தெரிவித்தார்.
மேலும், கோபாலகிருஷ்ணன் அவரது தாய் கலைவாணியுடன் சேர்ந்து கொண்டு தனது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு மருத்துவச் செலவுக்கு கூட பணம் கொடுக்காமல் துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க மூதாட்டி தெரிவித்தார்.
மேலும், தற்போது மருமகளும் பேரனும் கைவிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் தனக்கு உணவளித்து உதவி வருவதாக தெரிவித்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தனக்கு உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மனைவி பெரியம்மாள்(85). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பேரன் மற்றும் மருமகள் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு மருத்துவ செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என கூறி மனு அளித்தார்.
பின்னர் மூதாட்டி பெரியம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு 5 செண்ட் இடத்துடன் கூடிய வீட்டை தனது பேரன் கோபாலகிருஷ்ணன் பெயரில் எழுதி வைத்ததாக தெரிவித்தார்.
மேலும், கோபாலகிருஷ்ணன் அவரது தாய் கலைவாணியுடன் சேர்ந்து கொண்டு தனது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு மருத்துவச் செலவுக்கு கூட பணம் கொடுக்காமல் துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க மூதாட்டி தெரிவித்தார்.
மேலும், தற்போது மருமகளும் பேரனும் கைவிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் தனக்கு உணவளித்து உதவி வருவதாக தெரிவித்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தனக்கு உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.