கோவை வடவள்ளி அருகே கார் மீது கல் வீசிய வங்கி ஊழியர் கைது!

கோவை: கோவை வடவள்ளி அருகே கார் மீது கல் வீசிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை வடவள்ளி அருகே கார் மீது கல் வீசிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை லாலிரோட்டைச் சேர்ந்தவர் ஞானவேல் (35), பெரியார் ஆதரவாளரான இவர், தனது காரில் பெரியார் படம் மற்றும் கருத்துக்களை பொரித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை இவர் தனது காரில் கோவை வாலிரோடு அருகே வந்தபோது காரின் கண்ணாடி மீது கல் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சி அடைந்த ஞானவேல் திரும்பிப் பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கல் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை காரில் விரட்டி சென்ற ஞானவேல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அருகே வாலிபர்களை மடக்கினார். அப்போது, ஞானவேல் நண்பர் வெங்கடேஷ் என்பவரும் அங்கு வந்து அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டுத் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், இதுகுறித்து புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வடவள்ளியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜேஷ் (25), என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது நண்பர் சரவணனை தேடி வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...