நீலம்பூர் முதல் வாளையார் வரை உள்ள சுங்க சாவடிகள் அகற்றப்பட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

கோவை: நீலம்பூர் முதல் வாளையார் வரை உள்ள சுங்க சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: நீலம்பூர் முதல் வாளையார் வரை உள்ள சுங்க சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

கோவை கனியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு செல்லும் வாகனங்கள் அடுத்த 5 நிமிடத்தில் நீலம்பூர், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல், திருச்சி ரோடு அருகில் உள்ள சுங்கசாவடி, பொள்ளாச்சி ரோடு அருகில் உள்ள

சுங்கசாவடி, மதுக்கரை வரை 6 இடங்களில் சுங்கசாவடி கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. 




சொந்த மாவட்டத்திற்குள்ளேயே பயணிக்க தினசரி அபராதமா..? 

கோவை மாவட்டத்தில் உள்ள வாகனம் வைத்திருப்பவர்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டுமென்றால் தினசரி அபராதம் கட்டி வாகனத்தில் பயனிக்க வேண்டிய சூழல் உள்ளது. 




ஒப்பந்தகாலக் கெடு முடிந்தும் தனியார் நிர்வாகம் சுங்கசாவடி வசூல்..! 

சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் இல்லாமல்லேயே, மேலும் ஒப்பந்தகாலக் கெடு முடிந்த பின்னரும் தனியார் நிர்வாகம் சுங்கசாவடி வசூல் செய்து வருகிறது. எனவே, இதைக் கணக்கில் கொண்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இந்த முறைகேடான வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 




கனியூர் சுங்கச்சாவடியில் புதிய கட்டணங்கள் நிர்ணயம்

அதே போல், கனியூர் சுங்கச்சாவடியில் மாதாந்திர பாஸ் வைத்திருப்போருக்கு நாள் ஒன்றுக்கு ரூ-5 என்ற அடிப்படையில் மாதம் 150 ரூபாய் கட்டணம் கட்டி, சுங்கச்சாவடியில் கடந்து செல்ல உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்பட்டு பயனடைந்து வந்தனர். ஆனால், தற்சமயம் இம்முறை மாற்றப்பட்டு, நாளொன்றுக்கு வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப வரும் 1-ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் கட்ட வேண்டுமென புதிய அறிவிப்புகள் வந்துள்ள காரணத்தால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். 

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைவரையும் அழைத்து பேசி, விவசாயிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...