யானை தாக்கி முதியவர் பலி!

கோவை: கோவை மருதமலை அருகே டீ குடிக்கச் சென்ற முதியவரை யானை தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மருதமலை அருகே டீ குடிக்கச் சென்ற முதியவரை யானை தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருதமலை செல்லும் சாலையில், சட்டக் கல்லூரிக்கு முன்புறம் உள்ள கட்டடத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக இருந்தார்.இன்று அதிகாலை 6 மணியளவில் மருதமலைக்குச் சென்று டீ குடித்துவிட்டு வருவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண் யானை ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அவரைப் பார்த்த யானை திடீரென அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த முகமது நியாஸ் என்பது தெரியவந்தது.

யானை மடுவு பகுதிக்கு அருகே யானைகளை கண்காணித்து வந்த வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...