கோவை: கோவை மருதமலை அருகே டீ குடிக்கச் சென்ற முதியவரை யானை தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை மருதமலை அருகே டீ குடிக்கச் சென்ற முதியவரை யானை தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருதமலை செல்லும் சாலையில், சட்டக் கல்லூரிக்கு முன்புறம் உள்ள கட்டடத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக இருந்தார்.இன்று அதிகாலை 6 மணியளவில் மருதமலைக்குச் சென்று டீ குடித்துவிட்டு வருவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண் யானை ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அவரைப் பார்த்த யானை திடீரென அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த முகமது நியாஸ் என்பது தெரியவந்தது.
யானை மடுவு பகுதிக்கு அருகே யானைகளை கண்காணித்து வந்த வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மருதமலை செல்லும் சாலையில், சட்டக் கல்லூரிக்கு முன்புறம் உள்ள கட்டடத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக இருந்தார்.இன்று அதிகாலை 6 மணியளவில் மருதமலைக்குச் சென்று டீ குடித்துவிட்டு வருவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண் யானை ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அவரைப் பார்த்த யானை திடீரென அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த முகமது நியாஸ் என்பது தெரியவந்தது.
யானை மடுவு பகுதிக்கு அருகே யானைகளை கண்காணித்து வந்த வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.