கோவை: கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவை: கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் பெயர் விவரங்கள் கடந்த ஒரு மாதமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் முதல்கட்டமாக 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் முதல் கட்டமாக தடுப்பூசிக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு பின்பு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.