கொரோனா தடுப்பூசி: கோவை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு!

கோவை: கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



கோவை: கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் பெயர் விவரங்கள் கடந்த ஒரு மாதமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் முதல்கட்டமாக 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் முதல் கட்டமாக தடுப்பூசிக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு பின்பு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...