பொள்ளாச்சி அருகே கிராமசபை கூட்டம் நடத்த முயன்ற 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கிராமசபை கூட்டம் நடத்த முயன்ற 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கிராமசபை கூட்டம் நடத்த முயன்ற 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.



'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள, நாயக்கன்பாளையம் கிராமத்தில் நேற்று ஆனைமலை கிழக்கு ஒன்றியம் சார்பில், கிராம சபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், வீடு வீடாகச் சென்று, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

தகவலறிந்து அங்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார், கிராமசபைக் கூட்டம் நடத்த வந்த தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...