கோவை: வாளையாறு பகுதியில் லாட்டரி கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 2 பேர் தப்பிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை: வாளையாறு பகுதியில் லாட்டரி கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 2 பேர் தப்பிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை - கேரள எல்லையான வாளையாறு வழியாக பாலக்காடு நோக்கி கண்டெய்னர் லாரி நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியைத் தாண்டி சென்றபோது லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற இரு சக்கர வானத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த லாட்டரி கடைக்குள் புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் மயிரிழையில் சாலையோரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் லாரி நியூட்ரலில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஓட்டுநர் ஹேண்ட் பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாகவும் வாளையாறு போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பியதாக தெரிவித்தனர்.
கோவை - கேரள எல்லையான வாளையாறு வழியாக பாலக்காடு நோக்கி கண்டெய்னர் லாரி நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியைத் தாண்டி சென்றபோது லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற இரு சக்கர வானத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த லாட்டரி கடைக்குள் புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் மயிரிழையில் சாலையோரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் லாரி நியூட்ரலில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஓட்டுநர் ஹேண்ட் பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாகவும் வாளையாறு போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பியதாக தெரிவித்தனர்.